கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டை


             கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 9 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
          தட்டப்பள்ளம் என்னும் காட்டுப்பகுதியில், இன்று காலை வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
         அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் அப்பகுதியை நோக்கி வனத்துறையினர் விரைந்து சென்றனர். அங்கு, ஒரு மானைக் சுட்டுக் கொன்ற 9 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியும், ஏழு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

                                                                            -பசுமை நாயகன்